கோடிப் புண்ணியம் வழங்கும் கோமாதா வழிபாடு

வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
கோமாதா வழிபாடு
கோமாதா வழிபாடு
Published on

பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். அது தரக்கூடிய மூன்றுவிதமான பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருளாக அமைகின்றன.

எனவே வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.

பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com