இல்லாமை என்னுமொரு பொல்லாத பாவியால்
எந்நேரமும் இடருறாமல்
ஏற்காமல் ஏற்பவர்க் கில்லையென் றுரையாமல்
இழிதொழில்கள் செய்திடாமல்
கல்லாத புல்லர்உற வில்லாமல் கடுபிணி
கனாவிலும் எனைத் தொடாமல்
கற்றப் பெரியோர்களோடு தர்க்கித்தெதிர்த்துக்
கடிந்தசொற் சொல்லிடாமல்
வெல்லாமை வென்றவன் இடத்தில்வளர் அமுதமே
விரிபொழில் திருமயிலைவாழ்
விரைமலர்க் குழல்வள்ளி மறைமலர்ப் பதவல்லி
விமலிகற் பகவல்லியே!