அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை போக்கும் கோவில்

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை போக்கும் கோவில்
Published on

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கொடுமுடி திருத்தலம்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர். பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். கரூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com