சபரிமலை கொடி மரம் விசேஷம்

கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள். இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.
சபரிமலை கொடி மரம் விசேஷம்
Published on

சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.

கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.

கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.

சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.

எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com