பதினெட்டு படி பூஜை

படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது. 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
பதினெட்டு படி பூஜை
Published on

படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18ம்படி ஏறும் இடத்தில்

பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.

ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார்.

பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.

தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார்.

18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.

பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார்.

இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறி செல்வார்கள்.

பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com