மணி ரூபத்தில் ஐயப்பன்

பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும். அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.
மணி ரூபத்தில்  ஐயப்பன்
Published on

பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

X

Maalai Malar
www.maalaimalar.com