

சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும், தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும். இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் காயத்திரி மந்திரம் இதோ.
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
பொருள்:
காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.
இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.