இந்தியாவில் மற்றொரு புது நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி S22

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி S22 மாடலின் புது நிறத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி S22
சாம்சங் கேலக்ஸி S22
Published on

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் புதிதாக பின்க் கோல்டு நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இதுவரை மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தான் இந்த ஸ்மார்ட்போனின் புது நிறம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S22 மாடலில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8GB+128GB மற்றும் 8GB+256GB என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய பின்க் கோல்டு நிறம் மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் தற்போது- கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. புதிய பின்க் கோல்டு நிற சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் பின் கோல்டு நிற 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிற வேரியண்ட்களின் 8GB+256GB மாடல் விலை ரூ. 76 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com