2025 REWIND: ஐபிஎல் தொடரில் நடந்த சர்ச்சைகள்

சிஎஸ்கே அணி பந்து மாற்றியதாக நடந்த சம்பவம் சர்ச்சையானது.நடுவர் அவுட் கொடுக்காமலே இஷான் கிஷன் வெளியேறியது சர்ச்சையானது.
2025 REWIND: ஐபிஎல் தொடரில் நடந்த சர்ச்சைகள்
Published on

2025-ம் ஆண்டு ஐபிஎல் (IPL 18) தொடரில் பல சர்ச்சைகள் நடந்தன. இந்தத் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

இந்த தொடரில் முக்கிய சர்ச்சைகளில் முதலாவதாக சிஎஸ்கே அணியின் பந்து மாற்றம் (Ball-Tampering)குற்றச்சாட்டு:

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்து மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி, பந்தை மாற்றியதாக சந்தேகம் எழுந்தது. இது தொடரின் தொடக்க வாரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அம்பயர் முடிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய அவுட்டுகள்:

பல போட்டிகளில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. உதாரணமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறியது. அதுவரை அவுட் கொடுக்காமல் இருந்த அம்பயர் அவர் வெளியேறுவதை பார்த்ததும் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது போல அவுட் கொடுத்தார். இது மற்ற அணி ரசிகர்கள் அம்பானி காசு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பிட்ச் மற்றும் ஹோம் அட்வான்டேஜ் சர்ச்சை:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாக புகார் கூறினார். இது ஹோம் அட்வான்டேஜ் குறித்த விவாதத்தை தூண்டியது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தொடர் இடைநிறுத்தம்:

மே 9-ஆம் தேதி, எல்லைப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் ஒரு போட்டி நடுவில் கைவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஒப்பந்தம்:

பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை ரிப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்ததற்கு சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி, அரசியல் பதற்றம் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.

கொண்டாட்ட சோகம்:

RCB வெற்றிக்குப் பிறகு பெங்களூரு ஸ்டேடியம் வெளியே கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நடந்தது – இது ஆண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது.

இவை தவிர, வீரர்கள் இடையே சண்டைகள், அம்பயர் கொண்டாட்டங்கள் போன்றவையும் சர்ச்சைகளை அதிகரித்தன. இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சர்ச்சைகளையும் தந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com