வங்காள தேசத்திற்கு எதிராக 342 ரன்களை விரட்டி பாகிஸ்தான் அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிராக 342 ரன்களை விரட்டி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
வங்காள தேசத்திற்கு எதிராக 342 ரன்களை விரட்டி பாகிஸ்தான் அபார வெற்றி
Published on

பின்னர் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அசார் அலி, அஹமது ஷேசாத் ஆகியோர் களம் இறங்கினார்கள். அசார் அலி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 1 ரன்னில் வெளியேறினார். அஹமது ஷேசாத் 44 ரன்களிலும், மொகமது ஹபீஸ் 49 ரன்களும், சோயிப் மாலிக் 72 ரன்களும், இமாத் வாசிம் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ஓவரில் 109 ரன்கள் தேவைப்பட்டது, 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசன் அலி, ஃபஹிம் அஷ்ரப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.


72 ரன்கள் சேர்த்த சோயிப் மாலிக்

X

Maalai Malar
www.maalaimalar.com