வாலாஜாவில் பெண் தீக்குளித்து பலி

வாலாஜாவில் பெண் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

வாலாஜா:

வாலாஜாபேட்டை திருஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தி (வயது41). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சாந்தி கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com