வாலாஜா அருகே கால்வாயில் விழுந்து ரெயில்வே ஊழியர் மரணம்

வாலாஜா அருகே கால்வாயில் விழுந்து ரெயில்வே ஊழியர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

வாலாஜா:

வாலாஜா அடுத்த அனந்தலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு(28) இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ரகு அம்மூர் ரெயில் நிலையத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அனந்தலை கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் அங்குள்ள கால்வாயில் பைக்குடன் விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் ரகு கால்வாயில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com