

பசிபிக் தீவு நாடு வனுவாட்டு. அந்த தீவு நாட்டில் 20 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்கு ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் ஏற்பாட்டில் அந்த தீவில் உள்ள குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
40 கி.மீ. மலைப்பகுதியை தாண்டி வந்து ஆளில்லா விமானம் இந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி உள்ளது. சிறிய அளவிலான பெட்டியில் ஐஸ் கட்டிகள் வைத்து அதன் மத்தியில் தடுப்பூசி மருந்து பாட்டில்கள் வைத்து அந்த ஆளில்லா விமானம் எடுத்துச்சென்று இருக்கிறது. எதிர்காலத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு கூட ஆளில்லா விமானங்கள் மூலம் இப்படி மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களை வழங்குவதற்கு வழிபிறக்கும்.