

தஞ்சையில் வருகிற 29-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று விழாவுக்கான கால்கோள் நாட்டு விழா நடந்தது. இதில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கி , பூஜையை நடத்தி வைத்தார்.
இதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: தினகரன் - நடராஜன் ஆகியோரது வீடுகளில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறதே?
பதில்: இது புதிதல்ல. சரியாக வருமான வரியை கட்டவில்லை என்றால் இதுபோன்ற சோதனை நடைபெறும். அதேபோல் இதுவும் நடந்துள்ளது.
கேள்வி:- இரட்டை இலை சின்னம் பெற தினகரன் முயற்சி செய்யும் வரும் வேளையில் அவரது அச்சுறுத்த இந்த சோதனை நடைபெறுகிறதா?
பதில்:-அதுபோல் எதுவும் இல்லை. இரட்டை இலை சின்னத்துக்கும், இந்த வருமான வரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.