ஊத்துக்கோட்டையில் மேம்பாலம்: ஆரணி ஆற்றில் தூண்கள் அமைப்பு

ஊத்துக்கோட்டையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் நிறுவும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டையில் மேம்பாலம்: ஆரணி ஆற்றில் தூண்கள் அமைப்பு
Published on

ஊத்துக்கோட்டை:

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடும். அப்போது ஊத்துக் கோட்டை தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டு திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆரணி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 28 கோடியை அரசு ஒதுக்கியது.

இந்த மேம்பாலம் 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறங்களிலும் நடை பாதையும் அமைக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள இந்த மேம் பாலத்தை 21 தூண்கள் தாங்கி நிற்கும்.

மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள்நடை பெற்று வருகின்றன. மேலும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் நிறுவும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com