

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். கவர்னர் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள்) அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ‘கவர்னர் கோ பேக்’ என்றும் முழக்கமிட்டனர்.
ஒருகட்டத்தில், சபையின் மையப்பகுதியை நோக்கி பேப்பர் பந்துகளை வீசி எறிந்தனர். அவற்றை சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.