டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ்

சாய் சுதர்சன் அரைசதம் அடித்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ்.
சுதர்சன்
சுதர்சன்
Published on

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கோவை கிங்ஸ் அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலவில்லை. கங்கா ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

3-வது வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். ஆனால் அவருக்கு முகிலேஷ் (13 பந்தில் 17 ரன்), வெங்கடராமன் (7 பந்தில் 1 ரன்), ஷாருக் கான் (22 பந்தில் 28 ரன்) ஆகியோரால் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. இதனால் கோவை கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சாய் சுதர்சன் 19-வது ஓவரின் 4-வது பந்தை இரண்டு ரன்னிற்கு விரட்டி 36 பந்தில் அரைசதம் அடித்தார். 19-வது ஓவரில் கோவை கிங்ஸ் அணிக்கு இரண்டு சிக்சர்கள் கிடைக்க, 17 ரன்கள் அடித்தது. இதனால் ஸ்கோர் 138 ரன்களானது.

கடைசி ஓவரை குர்ஜப்நீத் சிங் வீசினார். மிகவும் சிறப்பாக வீசி, கோவை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. முதல் நான்கு பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் தன்வரை (7 பந்தில் 13 ரன்) வீழ்த்தினார். கடைசி பந்தில் சுதர்சன் பவுண்டரி அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. சுதர்சன் 40 பந்தில் 3 பவுணடரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com