டிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது காரைக்குடி காளை

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை #CSGvKK #TNPL2018
டிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது காரைக்குடி காளை
Published on

டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வி. ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, அனிருதா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதித்யா 19 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மான் பஃவ்னா அதிரடியாக விளையாடி 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். 6-வது வீரரான களம் இறங்கிய ஷாஜகான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் விளாச காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com