திருவள்ளூர் அருகே 2 பேரை கத்தியால் வெட்டி பணம்- செல்போன் பறிப்பு

திருவள்ளூர் அருகே 2 பேரை கத்தியால் வெட்டி பணம்- செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே 2 பேரை கத்தியால் வெட்டி பணம்- செல்போன் பறிப்பு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது நண்பர் சதீஷ் , இரண்டு பேரும் தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இருவரும் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றனர். பணத்தைத் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மாரிமுத்து, சதீசை கத்தியால் வெட்டி 2 சவரன் நகை, ரூபாய் 13,000, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

காயம்அடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com