போலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு - காபுல் நகரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் போலீஸ் நிலையங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் இன்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். #Kabulblasts
போலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு - காபுல் நகரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மத்திய பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான்.

இதேபோல், மேலும் இரு காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் இன்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல்களால் உண்டான  உயிரிழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Kabulblasts 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com