

மேட்டூர்:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர்கள் இறந்தது மிகவும் கண்டித்தக்கத்தது, வருத்தத்தை அளிக்கிறது.
அதுமட்டுமின்றி 26 பேர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மக்களை காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது மிகவும் கண்டித்தக்கது ஆகும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #SterliteProtest #BanSterlite #PMK