தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி தே.மு.தி.க.வினர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி தே.மு.தி.க.வினர்
Published on

திருச்சி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். 

வடக்கு மாவட்ட செயலாளர் குமார்,தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற் சங்க துணை செயலாளர் முஜிபு ரஹ்மான் கண்டன உரையாற்றினார். 

இதில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன் குமார், துணை செயலாளர்கள் வி.கே.ஜெயராமன், திருச்சி ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராமு, பெருமாள், பகுதி செயலாளர்கள் நூர் முகமது, உறையூர் மோகன், பொறுப்பாளர் கருணாகரன், குமாரசரவணன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், உறையூர் சாதிக், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சன்னாசிபட்டி பாரதிதாசன், பொருளாளர் லட்டு வைத்தியநாதன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முகேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com