திருவட்டார் அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

திருவட்டார் அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
Published on

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த வாவறைவிளை பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 53). தொழிலாளி. இவரது மனைவி ரோஸ்மேரி.

சம்பவத்தன்று வர்க்கீஸ் மனைவி ரோஸ்மேரி வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஜன்னல் ஓரம் வைத்து விட்டு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தது.

மேலும் வீட்டு அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் கைசெயினை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபனன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாவியை வைத்து செல்லும் இடத்தை நோட்டமிட்டு மர்ம நபர் இந்த திருட்டு சம்பவம் நடத்திருப்பதால் உள்ளூர் ஆசாமியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com