

நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் சங்கரலிங்கம்(வயது60). சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற இவரை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இதுபற்றி சங்கரலிங்கத்தின் மகன் செல்வமுருகன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சங்கரலிங்கத்தை தேடி வருகிறார்கள்.