

பொன்னமராவதி:
பொன்னமராவதியில் உள்ள பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவர் அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் தரப்பினர் சலீம் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் பெண்ணை கிண்டல் செய்த சலீம் (33) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சலீமை தாக்கியதாக வெற்றி செல்வன்(24), பன்னீர்(27) ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.