

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியானது.
பாகிஸ்தான் தரப்பிலும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் பத்திரமாக திரும்பியுள்ளனர்.
அவர்கள் இருவரும் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதால் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை இருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்ததாவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.