பரங்கிமலை ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் - தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை பரங்கிமலை ரெயில் விபத்தில் பலியான நால்வரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.8 லட்சம் வழங்க ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Railway
பரங்கிமலை ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் - தீர்ப்பாயம் உத்தரவு
Published on

சென்னை:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள தடுப்புச்சுவர் இடித்து மின்சார ரெயிலின் படியில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். பிளாட்பாரம் மாற்றி ரெயில் இயக்கப்பட்டதும், கூட்ட நெரிசலும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து வழக்கை சென்னை ரெயில்வே தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. பலியான நால்வரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com