ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #LassiporaPoliceStation #MilitantsAttack
ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் லஸ்சிபோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த சில பயங்கரவாதிகள் காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

#LassiporaPoliceStation #MilitantsAttack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com