

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மாநாடு வருகிற 29 மற்றும் 30-ந்தேதி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
த.வெ.க. அரசு அமைந்து பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றப்பட்ட பிறகு இந்த மாநாடு நடைபெற உள்ளது.
அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.