

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரமான விபத்து நடந்தது.
கற்பாறைகளை ஏற்றி வந்த ஒரு சரக்கு வாகனம், எதிரே வந்த ஒரு பஸ் மற்றும் 3 கார்கள் மீது மோதியது.
பஸ் மற்றும் 3 கார்களில் ஒரு திருமண கோஷ்டி துப்குரிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனங்கள், தவறான திசையில் சென்றதாகவும், பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கோர விபத்தில், 14 பேர் பலியானார்கள். அனைவரும் திருமண கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 6 பெண்களும், 4 குழந்தைகளும் அடங்குவர். 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் போக்குவரத்து முடங்கியது. கிரேன்கள் உதவியால், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர், போக்குவரத்து சீரடைந்தது.
மேலும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.