மாயம்
மாயம்

உடையார்பாளையம் அருகே முதியவர் மாயம்

உடையார்பாளையம் அருகே முதியவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 65). விவசாயியான இவர் நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் சரவணன், கோவிந்தசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com