திருச்சியில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 120 அரசு ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com