திருத்தங்கல் அருகே மது விற்ற 3 பேர் கைது

திருத்தங்கல் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சிவகாசி:

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்கிற பெரியமாரியப்பன் (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெரியமாரியப்பனை கைது செய்தனர். இதேபோல் சத்யாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த சிட்டி (69), பால்பாண்டி (42) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் போலீசார் அதிவீரன்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சா விற்பனை செய்த சிவகுமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com