

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அங்கு சென்று வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது மது போதையில் பீர் பாட்டிலை பள்ளியில் சுவர் மீது வீசி உள்ளனர். இந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை முத்தேஸ் சர்மில் (45) மீது பீர் பாட்டில் உடைந்த பாகம் பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.