வேட்டவலம் அருகே ரைஸ்மில் உரிமையாளர் தற்கொலை

வேட்டவலம் அருகே உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரைஸ்மில் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 61), அப்பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். அவர், உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, ரைஸ்மில்லில் வேலை பார்த்த ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார்.

அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, ராஜேந்திரனை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com