ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் - பணிகள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

அதன்படி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் பெரும்பான்மையானோர் பங்கேற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதில் வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் பங்கேற்கவில்லை. ஆதலால் அவர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com