

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் செய்தார்.
வலியதுறையில் பிரசாரம் முடிந்த பின்பு பிரியங்கா, இன்று இரவு திருவனந்தபுரத்தில் தங்குகிறார். நாளை காலை அவர் கொச்சி பகுதியில் பிரசாரம் செய்கிறார்.