பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர் கைது

நாகை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் இஸ்தியாக் மாலிம்(வயது20). பாலிடெக்னிக் மாணவர். இவர் பிளஸ்- 2 மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இஸ்தியாக் மாலிமிடம் கேட்டார். அப்போது அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் இஸ்தியாக்மாலிம் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com