கடன் தொல்லையால் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பாஸ்கருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த பாஸ்கரின் தந்தை தேவராஜன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com