வேலூரில் பெயிண்டரிடம் நகை, பணம் பறிப்பு- 2 பேர் கைது

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பெயிண்டரிடம் நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

வேலூர்:

வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபா (வயது 40), பெயிண்டர். இவர் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையில் கிரீன்சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பிரபா சட்டை பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் கையில் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த புஜ்ஜிபாபு என்கிற விஜய் (28), பூபாலன் (27), காட்பாடியை சேர்ந்த பிரதாப் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து புஜ்ஜிபாபு, பூபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரதாப்பை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com