லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- முன்னாள் அமைச்சர் வீட்டில் ரூ.25½ லட்சம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 26 இடங்களில் நடந்த சோதனை நேற்று இரவு முடிவடைந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com