தாய், மகள் மரணம்- உயர்நீதிமன்றம் விசாரணை

நொளம்பூரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் இறந்தது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது.
கரோலின் பிரிசில்லா, இவாலின்.
கரோலின் பிரிசில்லா, இவாலின்.
Published on

சென்னை:

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் 6ந்தேதி மாலை மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றார். 

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்நிலையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் இறந்தது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது. இழப்பீடு வங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com