கருணாநிதி அரசு பள்ளியில் எழுதிய குறிப்பை டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்

குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த மு.கருணாநிதி அரசு பள்ளியில் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பேட்டினை காணலாம்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பேட்டினை காணலாம்.
Published on

கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் கடந்த 16-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த 16-ந்தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.

இந்தநிலையில் அந்த பள்ளிக்கு வருகை தரும் முக்கிய நபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பள்ளி பற்றிய குறிப்புகள் எழுதி வைத்திருந்த குறிப்பேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது, ஒரு குறிப்பேட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, 1956-ம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து கைப்பட எழுதி இருந்த வாசகம் ஒன்று இடம் பெற்று இருந்தது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com