கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

திரிபுரா மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பா.ஜ.க.வினர் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா. கலைநாதன், கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com