தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
காமராஜ் சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
காமராஜ் சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
Published on

ஊட்டி:

மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால் அவற்றின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்து உள்ளது.

காமராஜ் சாகர் அணையின் மொத்த உயரம் 49 அடி ஆகும். இதன் நீர்மட்டம் 45 அடியை தாண்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. 33 அடி உயரம் கொண்ட கிளன்மார்கன் அணையில் 30 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. 210 அடி உயரமுள்ள அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் 205 அடியாக உள்ளது.

அவலாஞ்சி அணை 171 அடி உயரம் கொண்டது. இங்கு 169 அடிக்கு தண்ணீர் உள்ளது. எமரால்டு அணையின் உயரம் 184 அடி ஆகும். இங்கு 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கடல் போல் காணப்படுகிறது. மலைகளுக்கு நடுவே உள்ள அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அதேபோல் ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் டைகர்ஹில், மார்லிமந்து, தொட்டபெட்டா அப்பர், கோடப்பமந்து லோயர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. காலையில் இருந்து வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com