மதுரை ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 4 பேர் படுகாயம்

ஜவுளி ஆலை பாய்லர் திடீரென வெடித்து சிதறியதில் பணியில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

மதுரை:

மதுரை விளாங்குடியில் மணிராஜ் என்பவருக்கு சொந்தமான ஜவுளி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்களுக்கான ஆடை ரகங்கள் உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜவுளி ஆலை பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த ராஜேஸ்வரி (வயது 32) என்பவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com