

முத்தூர்:
இவ்வாறு இரவு பகலாக இயங்கி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தற்போது விபத்து ஏற்பட்டால் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் நேரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் உயிர்கள் சில சமயம் காப்பாற்றப்பட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத்தினால் கடந்த 2 வார காலமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது இங்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளும் சிகிச்சைக்காக சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்