கரும்பு பால் அரைக்கும் இரும்பு எந்திரம் தலையில் விழுந்து மாணவன் பலி

சென்னிமலை அருகே கரும்பு பால் அரைக்கும் இரும்பு எந்திரம் தலையில் விழுந்ததில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கரும்பு பால் அரைக்கும் இரும்பு எந்திரம் தலையில் விழுந்து மாணவன் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கத் தொழுவு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமித்தரா. இவரது மகன் பூவரசன் (வயது14).

சுமித்தரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் மகன் பூவரசனுடன் வசித்து வருகிறார். பூவரசன் பெருந்துறையில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

சுமித்தரா வெள்ளோட்டில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். அவர் கடை அருகே கரும்புபால் கடை உள்ளது. பூவரசன் மாலை பள்ளி முடிந்ததும் வெள்ளோட்டில் உள்ள ஜூஸ் கடைக்கு செல்வது வழக்கம்.

அதே போன்று சம்பவத்தன்றும் பூவரசன் மாலையில் பள்ளி முடிந்ததும் ஜூஸ்கடைக்கு சென்றுள்ளான். அப்போது அருகில் உள்ள கரும்புபால் கடைக்காரர் பூவசரனை அழைத்து கரும்பு எந்திரத்தை தள்ளுவதற்கு உதவி செய்ய கோரினார்.அந்த கடைக்காரர் கரும்புபால் எந்திரத்தை முன்னால் இருந்து தள்ள பூவரசன் பின்னால் இருந்து எந்திரத்தை தள்ளினான்.அப்போது எதிர்பாராத வகையில் கரும்புபால் எந்திரம் பூவரசன் தலை மீது விழுந்தது.

இதில பூவரசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான். பூவரசனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் பூவரசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com