‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்

‘ஓவர் த்ரோ’ மூலம் நான்கு ரன்கள் வழங்கப்பட்டதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
Published on

இதில் மிகவும் விமர்சனம் செய்யப்பட்ட சம்பவம் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்துக்கு 6 ரன்கள் கொடுத்ததுதான். இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. டிரென்ட் போல்ட் வீசிய 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் சந்தித்தார்.

பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு வேகமாக இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். 2-வது ரன்னுக்கு ஓடும்போது அவர் க்ரீஸை நெருங்குவதற்குள் மார்ட்டின் கப்தில் பீல்டிங் செய்து வீசிய பந்து கீப்பரை நோக்கி பாய்ந்து வந்தது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க பென் ஸ்டோக்ஸ் பாய்ந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து பேட்டில் பட்டு கீப்பருக்கு பின்புறமாக பவுண்டரிக்குச் சென்றது.

இதனால் ஓடி எடுத்தது இரண்டு ரன், ‘ஒவர் த்ரோ’ மூலம் நான்கு ரன் என 6 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு மங்கிப்போனது. பென் ஸ்டோக்ஸ் கைகள் இரண்டையும் உயர்த்தி தன் மீது தவறு ஏதும் இல்லை என்பதை சைகை மூலம் காண்பித்தார்.

போட்டிக்குப்பின் நியூசிலாந்து கேப்டனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அவர் நடுவர்களிடம் நான்கு ரன்கள் எங்களுக்கு வேண்டாம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் நினைவு கூர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com