லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கடந்த மூன்று தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் வழக்கம்போல் நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com